மாநிலங்களவைத் தேர்தல் 2025: 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 2025-இல் நடைபெறும் தேர்தலுக்காக வேட்புமனுக்கள் ஜூன் 10, 2025 காலை 11.00 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், கீழ்க்கண்ட 6 வேட்பாளர்கள் அளித்த வேட்புமனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டுள்ளன:
- திரு. I .S இன்பதுரை, அ.இ.அ.தி.மு.க.
- திரு. கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம்
- திரு. எஸ்.ஆர். சிவலிங்கம், தி.மு.க.
- திரு. ம. தனபால் , அ.இ.அ.தி.மு.க.
- திருமதி ராஜாத்தி, தி.மு.க.
- திரு. பி. வில்சன், தி.மு.க.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 12-ந் தேதியாகும். தி.மு.க., அ.தி.மு.க, க்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெற்றதாக 12-ந்தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும என்று எதிர்பார்க்கப்படுகிறது