UPSC தேர்வர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளுக்கு (UPSC Civil Services Examination) தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதல்நிலைத் தேர்வில் (Preliminary Exam) வெற்றி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு ரூ.25,000/- நிதியுதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டம், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்படும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு (NM-CE) மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளில் அதிக அளவில் சேருவதையும், போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவதையும் நோக்கமாகக் கொண்டது இத்திட்டம்.
உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் யார்?
- 2025 ஆம் ஆண்டு நடைபெறும் UPSC குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வில் (Prelims Exam – 2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த உதவித்தொகை தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது பூர்வீகச் சான்றிதழ் (Nativity Certificate) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்:
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
- Civil Services (Main) Examination-2025க்கான DAF-I படிவம்.
- வங்கி கணக்கு விவரங்கள்.
- பூர்வீகச் சான்றிதழ் (Nativity Certificate).
முக்கிய தேதிகள்
நிகழ்வு | தேதி |
---|---|
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 21.06.2025 |
விண்ணப்பம் முடியும் நாள் | 02.07.2025 |
விண்ணப்பங்களின் ஆரம்பப் பரிசீலனைக்குப் பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் நான் முதல்வன் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு
ஏதேனும் சந்தேகங்களுக்கு, கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
- தொலைபேசி: 9043710214 / 9043710211
- மின்னஞ்சல்: [email protected]