ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு பணிக்கொடைப் பலன்கள் நீட்டிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை, 24.01.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பு எண் FS-1/3/2023-PR வாயிலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், 01.04.2025 முதல் மத்திய அரசு குடிமைப் பணியில் சேரும் புதியவர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக அமையும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (National Pension System – NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஓய்வூதியதாரர் நலத்துறை தெளிவுரை
மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 18.06.2025 அன்று வெளியிட்ட அலுவலக மெமோராண்டம் எண் 57/01/2025-P&PW(B)/UPS/10498 வாயிலாக ஒரு முக்கியத் தெளிவுரையை வழங்கியுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியர்கள், மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிக்கொடை வழங்குதல்) விதிகள், 2021 இன் கீழ் வழங்கப்படும் ‘ஓய்வூதிய பணிக்கொடை (Retirement gratuity) மற்றும் இறப்புப் பணிக்கொடை (Death gratuity)’ ஆகிய பலன்களைப் பெறத் தகுதி பெறுவார்கள்.